Wednesday, October 31, 2012

பய(ண)ம் !!!

ஆயிரம் முறை மழை ,இடி ,புயல் அடித்தும்
சுறாவளியாய் பயணித்தவன் !

இன்று பனி போன்ற  மழையை கண்டு
பயந்து  பரிதவிக்கிறேன்?

ஏன்  !

என்னவள் மழையில் பயணம்
செய்கிறாளே !!!




Thursday, September 13, 2012

உன் பெயர் ?

கவிதை எழுத நினைத்து பேனா  எடுக்கிறேன்,

இறுதியில் எழுதுவதென்னவோ உன் பெயர் தான் !!


Sunday, September 2, 2012

மறுபிறவி !!

மறுபிறவி வேண்டாம்
என்றிருந்தேன்  !

ஆனால்!

திரும்பவும் பிறக்க ஆசை
உன்னோடு வாழ !

நீ  மறுபடியும் பிறப்பாயா  ??? 
ஏனென்றால் தேவதைகளுக்கு மறுபிறவி இல்லையாம் :(




நரக பேருந்து நிலையம் ?


நகரப் பேருந்து நிலையம்

நரகப் பேருந்து நிலையம் ஆனது ? ?

என்னவள்

வராத நாளில் .. 




Saturday, September 1, 2012

ரகசிய பேச்சு ?

உலகின் மிகச்சிறந்த
என் கவிதையும்  ,

பேரழகனா உன் ஓவியமும்
ரகசியமாய் சந்தித்து பேசியது
உன்னைப்பற்றிதான் !!


நிலவு


நிலவை வீட்டில்  
வைக்க முடியாது !
என்று யார் சொன்னது ?
அதோ என்னவள் ,
வீட்டினில் தூங்குகிறாளே !







Tuesday, August 21, 2012

அழகி :)

முழுநிலவு !!!


ஒரு வருடத்தில் 13 முறை முழுநிலவு
பூமிக்கு தெரிகிறதாம் !
அன்பே !
ஆனால் எனக்கு மட்டும் உன்னை, 
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தெரிகிறதே !!! 







Monday, August 20, 2012

மகராசி !!!

ராசி இல்லாதவளாம் நீ..........


எனக்கு மட்டும் எப்படி மகராசியாய் இருக்கிறாய்..

 


Saturday, July 14, 2012

குழப்பம் ?


கவிதை எழுத சொன்னார்கள்

தலைப்பு :- தேவதை

யாரை பற்றி நான் எழுதுவது ???




உயிரெழுத்து ??


உயிரெழுத்து எத்தனை என்றார்கள் ?
சற்றென்று சொல்லிவிட்டேன்

"இரண்டு " (!!??)
ஆம் !!
அவள் பெயரில் உள்ள எழுத்துக்கள்
அத்தனைதான்..



Friday, April 20, 2012

அன்பு !!!

இந்த உலகில் விலைமதிப்பற்றது

"அன்பு " தான் !

விலை இல்லாமல் கிடைப்பதால்தான் 

அதன் மதிப்பை யாரும் உணருவதில்லை !







Thursday, March 1, 2012

தடுப்பூசி !!!



கல் நெஞ்சக்காரியே !

தயவு செய்து உன் தாயிடம் கேட்டுப்பார் ,

காதல் வராமலிருக்க 

நீ பிறந்தவுடன் 

தடுப்பூசி போடப்பட்டதா என்று ???



மறக்க முடியுமா ?


என்னை வெறுத்தவர்களையே

மறக்க முடியாத போது ,,

என் உயிருக்கு மேலே விரும்பிய உன்னை

எப்படி மறப்பேன் ???




பிரார்த்தனை !!!


நீ காதலிக்கும் பெண்

உன்னை காதலிக்கவில்லை என்றால்

கவலைப்படாதே !!!

அது உன் வருங்கால மனைவியின்

பிரார்தனையாககூட இருக்கலாம் !!!






Saturday, February 25, 2012

மதிப்பு



நீ உடுத்தினால்!!
கூரை புடைவையும்
கோடிக்கு மேல் !!



Friday, February 24, 2012

தொலைந்த இதயம்














உன் கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

வாழ்க்கை

யாரோடு முடியுமோ அவர்களோடு வாழ்வதல்ல வாழ்க்கை!

யாரின்றி வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வதே வாழ்க்கை !





Saturday, February 18, 2012

மறதி !!!

அன்பே நீ என்ன தேர்வுத்தாள் ஆ ????

உன்னை பார்த்ததும் எனக்கு எல்லாம் மறந்து போகின்றது !

Tuesday, February 14, 2012

"காதலர்தினம் "


உன்னை பார்க்கும் எல்லா
தினமும் எனக்கு 

காதலர்தினம் தான்!!!
























Monday, January 2, 2012

என் கவிதைச் சாலை !!!


சிவப்பு
வறுமையின் நிறம்
சிவப்பு
சிக்னலில் கையேந்தும்
பிச்சைக்காரன் !!!
















சுமங்கலி
ஹோலிப் பண்டிகையால்
சுமங்கலி ஆனாள்
வெள்ளை புடவையில்
சாயத்தின் பல வண்ணங்கள் !!




















வாழ்க்கை பயணம்

நீ தூக்கி எறிந்த டிக்கெட்டுக்களை
பயன்படுத்தியே
என் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன்...






















நிலவு
புழுதி காற்று அடித்ததால்
நிலவில் மழை
என்னவளின் இரு கண்கள் !!!



















அமாவாசை
பூமிக்கு மின்தடங்கள்
பராமரிப்பு பணியில் இருக்கிறதோ
நிலவு ??




















துடிப்பு
இதயம் துடிக்கையில்
கவனிக்க ஆளில்லை !!!
நின்று விட்டால்
எல்லோரும் துடிப்பார்கள் ????






















ஆழம்
ஒரு துளியில் கூட
ஆழம்!
தண்ணீர் அல்ல
கண்ணீர் ....
  





















மீதம்
எப்போது தருவாய் ?
பேருந்தில் உன்னை கண்டதால்
நான் இழந்த மீதத்தை ??




























குழிகள்
சிரிக்காமல் குழி விழுகிறது
எங்கள் ஊர்
சாலைகளில் !!



















மனது
அன்பே உன் கல் மனதை கொடு
எனக்கு
கல்லறை கட்ட !!!




*********************************************************************************



Wednesday, December 28, 2011

என் முதல் கவிதை....

அமாவாசை

அமாவாசயிலும் கூட நட்சத்திரம் ??

என்னவளின் தலையில்  நரைத்த முடி !!!