Thursday, September 13, 2012

உன் பெயர் ?

கவிதை எழுத நினைத்து பேனா  எடுக்கிறேன்,

இறுதியில் எழுதுவதென்னவோ உன் பெயர் தான் !!


Sunday, September 2, 2012

மறுபிறவி !!

மறுபிறவி வேண்டாம்
என்றிருந்தேன்  !

ஆனால்!

திரும்பவும் பிறக்க ஆசை
உன்னோடு வாழ !

நீ  மறுபடியும் பிறப்பாயா  ??? 
ஏனென்றால் தேவதைகளுக்கு மறுபிறவி இல்லையாம் :(




நரக பேருந்து நிலையம் ?


நகரப் பேருந்து நிலையம்

நரகப் பேருந்து நிலையம் ஆனது ? ?

என்னவள்

வராத நாளில் .. 




Saturday, September 1, 2012

ரகசிய பேச்சு ?

உலகின் மிகச்சிறந்த
என் கவிதையும்  ,

பேரழகனா உன் ஓவியமும்
ரகசியமாய் சந்தித்து பேசியது
உன்னைப்பற்றிதான் !!


நிலவு


நிலவை வீட்டில்  
வைக்க முடியாது !
என்று யார் சொன்னது ?
அதோ என்னவள் ,
வீட்டினில் தூங்குகிறாளே !